தந்தையை இழந்து கதறி அழுத பெண்! வீட்டுக்குள் வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய குரங்கு!

தந்தையை இழந்து கதறி அழுத பெண்! வீட்டுக்குள் வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய குரங்கு!

கர்நாடக மாநிலம் நார்கண்ட்   என்ற இடத்தைச் சேர்ந்த தேவேந்திரப்பா கம்மார் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.  இதனால் அவரது உடலை வீட்டுக்குள் வைத்து ஊர் மக்களும், உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர்.

அப்போது, முதியவரின் மகள் மிகவும் வேதனையில் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குரங்கு ஒன்று வேகமாக வந்தது. அனைவரும் துக்கத்தில் இருந்ததால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

நேராக உயிரிழந்தவரின் மகளிடம் அந்த குரங்கு சென்றது. பின் அந்த பெண்மணியின் தலையை ஆறுதலாக தடவிக் கொடுத்தது அந்த குரங்கு.

பின்னர் அந்த பெண்மணியை கட்டியணைத்து ஆறுதலும் கூறியது குரங்கு. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்