மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்புசத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உடல் சூடு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.
• தேவையற்ற மனக்குழப்பம், எரிச்சல் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் மனதில் நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும்.
• மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிவதில் பிரச்னை இருப்பவர்கள் மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
• இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும், உடல் களைப்பு தீரும்.
• மணத்தக்காளியை சாறு எடுத்து சாப்பிட்டால் உடலில் தோன்றும் வீக்கம் குறையும். சருமம் பளபளப்பாகும்.
தேமல், பரு, கரும்புள்ளி உள்ள இடங்களுக்கு மணத்தக்காளி கீரையை அரைத்து பற்று போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். கசப்புத் தன்மை உடையது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது