• ஒற்றைக்
குழந்தையை சுமப்பதைவிட
கூடுதல் குழந்தை
சுமக்கும்போது இதயத்துடிப்பு
மற்றும் ரத்தஅழுத்த
அளவு மாறுபடுகிறது.
• ரத்தத்தில்
இருக்கும் ஹீமோகுளோபின்
மற்றும் பிளாஸ்மா
புரோட்டீன் அளவு
குறைவதற்கு அதிக
வாய்ப்பு உண்டு.
• ஹீமோகுளாபின்
அளவு குறைவதால்
கர்ப்பிணிக்கு அனீமியா
ஏற்படுவதுடன் சுவாசக்
குறைபாடு ஏற்படுவதற்கு
வாய்ப்பு உண்டு.
• கரு
கலைந்து போவதற்கான
வாய்ப்புகள் ஒற்றைக்
குழந்தையைவிட, கூடுதல்
குழந்தையை சுமக்கும்
கர்ப்பிணிக்கு அதிகமாக
இருக்கிறது.
உடல் சோர்வு,
பலவீனம் போன்றவையும்
கூடுதல் குழந்தை
சுமக்கும் கர்ப்பிணிக்கு
ஏற்படுகின்றன. இவை
தவிரவும் தோன்றும்
சில விளைவுகளை
நாளை பார்க்கலாம்.
ஆனால் அத்தனை
பிரச்னைகளுக்கும் மருத்துவரீதியில்
தீர்வு இருக்கிறது
என்பதை கர்ப்பிணிகள்
உணர்ந்துகொள்ள வேண்டும்.