·
கடைகளில் விற்கும் தைலங்கள் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டுமே உகந்தது, சிறுவர்களுக்கு அல்ல என்பதை உணரவேண்டும்.
·
பெரும்பாலான தைலங்களில் கற்பூரம் மூலப்பொருளாக இருப்பதால், குழந்தைக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
·
ஒருசில தைலங்களை தடவும்போது தோலில் கொப்புளம் ஏற்படவும், தோல் உரிதல் நிகழவும் வாய்ப்பு உண்டு.
·
மிகவும் ஸ்ட்ராங்கான தைலம் தடவும்போது, குழந்தைக்கு மூச்சு முட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு.
அதனால் எந்தக் காரணம் கொண்டும் கைக்குழந்தைக்கு தைலம் தடவக்கூடாது. மருத்துவர் தரும் சொட்டுமருந்து, மாத்திரை, டானிக் மூலம் மட்டுமே நோயை தீர்க்கவேண்டும்.