·
இரண்டு ஆண்டுகள் வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றாலும் ஆறு மாதங்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது இன்றைய மருத்துவம்.
·
தாய்ப்பால் குடித்தபிறகும் பசியால் குழந்தை அழுவது தெரிந்தால், திட உணவும் சேர்த்து கொடுக்கவேண்டும் என்று அர்த்தம்.
·
வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவும் சேர்த்துக்கொடுக்கத் தொடங்கலாம்.
·
குழந்தைக்கு பற்கள் முளைத்துவிட்டால் கடிக்கத் தொடங்குவார்கள் என்பதால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.
ஏதேனும் உடல் ரீதியிலான பிரச்னை காரணமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருந்துகளின் தன்மைக்கேற்ப சில நாட்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம்.