• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும்.
• நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம்.
• தொடர்ந்து நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் தலைவலிக்கு காரணமாகலாம்.
• வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற கடுமையான மணமும் குழந்தைக்கு தலைவலியை உண்டாக்கலாம்.
இதுமட்டுமின்றி காய்ச்சல், புண் போன்ற பிரச்னைகளாலும் தலை வலி உண்டாகலாம். தலைவலியுடன் வாந்தி, காய்ச்சல் தொடரும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.