மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டதையும் சாப்பிட்டு அவஸ்தைப்படக் கூடாது. ஒரு சிலருக்கு கீரை எடுக்கவும் தடை விதிப்பார்கள். மருத்துவர் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பதுதான் இதயத்துக்கு நல்லது.
சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். காலையில் போடவேண்டியதை இரவு சேர்த்துப் போடுவது, அல்லது போடாமல் தவிர்ப்பது போன்றவை இருக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவுக்கு மட்டுமே மாத்திரை எடுக்க வேண்டும், அதையும் சரியான தருணங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு, ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை போன்றவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.