வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.
· வெண்டையில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
· வெண்டைக்காயில் பிசுபிசுவென்று வெளிப்படும் திரவத்தின் தன்மை காரணமாக மூளைக்கு புத்துணர்ச்சியும், நரம்புக்கு சுறுசுறுப்பும் கிடைக்கிறது.
· வெண்டையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றுகிறது.
· வெண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு நல்ல புத்திக்கூர்மையும், ஞாபகசக்தியும் கிடைக்கிறது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து உடலின் திரவ இழப்பை தடுத்து, உடல் குளுமை அடைவதற்கு உதவுகிறது.