நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

இவை ஒவ்வொன்றும் மருத்துவ
வகையில் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன.  

மாணிக்கம்: சரீராதி சுரங்கள், சந்நிபாத தோஷங்கள், ரோகம், வாதப்பிரமேகம், கண்ணோய் ஆகியவை தீரும் வசீகரமுண்டாகும்.

வைரம்: ஆறு வகை வைரங்கள் உள்ளன.  அவற்றில் மகாரசங்கள் தங்கியிருப்பதால், நேத்திர ரோகம் முதலான ரோகங்கள் நீங்கும்.  உடலுக்கு அழகைக் கொடுக்கும்.

வைடூரியம்: சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல்பிடிப்பு, வாதகுன்மம், பைத்தியம் முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்

கோமேதகம்: பித்தம், மலபந்தம், சுரத்தால் பிறந்த துர்க்குணம் ஆகியவற்றை நீக்கும். பளபளப்பைத் தரும்.

புஷ்பராகம்: சுக்கில விருத்தியும், நல்லறிவும், கீர்த்தியும் உண்டாகும்.  மேகம் முதலான நோய்கள் நீங்கும்.

பவழம்: சூட்சையின் விகாரம், கபம்,  சந்நிபாத சுரம்,  இருமல், கீடவிஷம், சுக்கில ஷீணம், நாவில் சுரசுரப்பு ஆகியவை விலகும்.  சரீர காந்தி உண்டாகும்.

முத்து: ஜீவரத்தினம் எனும் முத்தினால் வீக்கம், அரோசகம், மெலிவு, கண்நோய் அக்கினி கீடவிஷம், குரல்வளையில் சந்திக்கின்ற கோழை, அதைரியம் ஆகியவை நீங்கும்.

மரகதம்: இனிப்புள்ள மரகதம் விந்துவை அதிகரிக்க செய்யும். பதினெட்டு வித பூத பைசாசங்கள் விரணம், விஷங்கள், மதுமேகம் ஆகியவற்றை நீக்கும்.

நீலம்: குதிகால் வலி, மேகநீர், அதிக பித்தம், மனச்சோர்வு ஆகியவை போகும். நல்லறிவும் அதிக சுக்கிலமும் உண்டாகும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்