கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.
பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள். இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள். இது மற்ற பக்தர்களின் காதில் விழக்கூடாது என்பதற்காகத்தான் மணியோசை எழுப்பப்படுகிறது.
இந்த மணியோசை கேட்டு துர்தேவதைகள், ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர் என்பதும் ஐதீகம். பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறது. மணி ஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.