சந்தன மரத்தின் கட்டை நறுமணம் உடையது மட்டுமின்றி மருத்துவப் பயன் நிறைந்தது. இந்த மரத்தை அரசு அனுமதி பெற்றுத்தான் வளர்க்கவும் விற்பனை செய்யவும் முடியும்.
• சந்தனம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. வியர்வையை மட்டுப்படுத்தி உடம்புக்கு மணம் தரக்கூடியது.
• சந்தனத்தால் செய்யப்பட்ட ஊதுபத்தியை வீட்டில் ஏற்றிவைத்தால் நறுமணம் கமழ்வதுடன் தொற்றுக் கிருமிகளை தடுக்கவும் செய்யும்.
• சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறுடன் கலந்து அரைத்து தடவினால் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்னைகள் தீரும்.
• சந்தனத்தை உடலில் தேய்த்து குளித்துவந்தால் நரம்புகள் பலமடையும். சுறுசுறுப்பும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
போலியான சந்தனக் கட்டையை பயன்படுத்தினால் உடம்புக்கு ஆபத்து உண்டாகலாம், அதனால் அசல் சந்தனக் கட்டையை தேர்வு செய்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.