முகத்தின் கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாகணுமா! இந்த பேக் போட்டு பாருங்க!

முகத்தின் கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாகணுமா! இந்த பேக் போட்டு பாருங்க!

கொய்யாவை பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து பூசிக் கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் முகம் புதுபொலிவு பெறும். சரும ஆரோக்கியம் மேம்படும்; அழகு கூடும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்

முதலில் கொய்யாவை சீவி, பிழிந்து சாறு எடுக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.

முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.

கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்