விதம் விதமான சரக்குகள். டார்கெட் போட்டு வேலை செய்யும் ஊழியர்கள் என டாஸ்மாக் கடைகள் கோலாலமாக கல்லாக் கட்டிக் கொண்டுள்ளன. எத்தனையோ விதமான சரக்குகளை இங்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது புதிய ரக பீர் ஒன்றை குடிகாரர்களின் ‘நலன்’ கருதி தமிழக டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்துள்ளார்கள். அதுதான் 100 ரூபாய் பீர்.!
இனி 100 ரூபாய் இருந்தால் போதும் கடையில் கொடுத்து அதனை வாங்கி அருந்திவிட்டு செல்லலாம். அதுவும் புல் கூலிங்கில் இந்த பீர் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
தேர்தல் நெருங்கும் வேளையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 100 ரூபாய் பீர் அனைவரையும் கவரும் என்றே சொல்கிறார்கள்.