பிறந்தது விகாரி தமிழ் புத்தாண்டு! உங்களுக்கான பலன்கள் இதோ!

பிறந்தது விகாரி தமிழ் புத்தாண்டு! உங்களுக்கான பலன்கள் இதோ!

இதனால் மனித உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாமல் போகும். பெட்ரோல் டீசல் கச்சா பொருட்கள் விலை ஏற்றம் உண்டாகும் அமெரிக்க ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் பனிப்போர் தொடரும் உலக சந்தையில் போட்டிகள் தீவிரம் இருக்கும். மருந்து கண்டுபிடிக்க முடியாத பயங்கர நோய் ஒன்று உலகை மிரட்டும்

இந்தியா நாடு: இந்தியாவில் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ப.ஜ.கா.வெற்றி வாய்பை இழக்கும் தேர்தலுக்கு பிறகு சில கட்சிகள் கூட்டணி மாற்றத்தில் குறைந்த MPகள் கொண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் ராகுல் காந்தி பிரதமர் ஆக வாய்ப்பு இல்லை அவ்வாறு பிரதமராக இருந்தாலும் சில காலம் பிறகு பதவியை ராஜினமா செய்து விடுவார். மாநில கட்சிகள் பலமே பாராளுமன்றத்தில் குழப்பம் உண்டாக்கும். பொதுமக்கள் மனதில் பயம் நிம்மதி இன்றி இருப்பார்கள் பெட்ரோல் டீசல் தட்டுபாடு வரும் விலை ஏற்றம் இருக்கும் 

கிருஸ்துவ ஆலயம், மசூதி கோவில் சாமியார்மடங்கள் ஆகிய இடங்களில் துஷ்ட சம்பவங்கள் நடைபெறும் நாடு முழுவதும் குழந்தைகள் மீது பாலியல் போர் நடந்து கொண்டே இருக்கும். பள்ளி கல்லூரி கல்வி தரம் குறையக்கூடும். லஞ்சம் ஊழல் புகார் நீதிபதிகள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய அளவில் வாகன விபத்துதுக்கள் நடைபெறும் ரயில் விபத்துக்கள் பெரும் அதிர்ச்சியும் மனித உயிர் தேசத்தை உண்டாக்கும். நாடு முழுவதும் மழையும் விவசாயம் கவலை தரும் பருவ மழை இந்த ஆண்டு கைகொடுக்காது

தமிழ்நாடு: தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆளும் எடப்பாடி அரசு மீது கோபம் வெறுப்பு தான் உண்டாகும் பொதுமக்களிடம் லஞ்சம் ஊழல் குறைவு இருக்காது. நடக்கும் தேர்தலில் எடப்பாடி அரசுக்கு எந்த விதமான சாதகமான போக்கு இல்லா விட்டாலும் ஆட்சி மாற்றம் ஆட்சி கலப்பு என்று எதுவும் இல்லாமல் ஆட்சியை தக்க வைத்து கொள்வார். மு.க.ஸ்டாலின் அரசியல் சாதகமான நிலை உண்டாகும் முதல்வர் பதவி சட்டசபை பொது தேர்தலில் வெற்றி பெற்று பிறகு தான் கிடைக்கும். விவசாய பிரச்சனைகள் தொடரும். மழை குறைவு . விலைவாசி ஏற்றம் இருக்கும். சிவகங்கை பரமகுடி தூத்துகுடி திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஜாதி கலவரம் நடக்கும் கல்வி தரம் குறையும் ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்கள் வெளிப்படுவார்கள்.ஒரு சில இடங்களில் தீ விபத்தும் தொழில் நாசம் அடையக்கூடும். வாகன விபத்துக்கள் அதிகமாகும் ஆனி மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஆட்சி குழப்பம் உருவாகும்.

குறிப்பு : உங்கள் ஜாதகத்தில் சனி திசை நடந்தாலும் அல்லது சனி புக்தி நடந்தாலும் அல்லது ஏழரைச் சனி காலத்தில் இருந்தாலும் அல்லது அஷ்டம சனி நடந்தாலும் அல்லது ஜாதகத்தில் சனி நீசம் பெற்று இருந்தாலும் சனி 6, 8 பாவத்தில் மறைந்து இருந்தாலும் …. இவர்கள் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு உயிர்க்கு கண்டங்கள் உருவாகும் மேலும்  மலை உச்சி உயரமான கம்பம் போன்ற இடங்களில் ஏறும் போது கவனம் தேவை. வீடுகளில் பாத்ரூம்மில் கால் வழுக்கி விழக்கூடும். கவனமே துணை.

பரிகாரம்: அமாவாசை தினங்களில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் 

பயணத்தின்போது வெல்லம் கட்டி கையில் அல்லது பையில் இருக்க வேண்டும்

ஓம் சிவாயா நம என்கிற மந்திரத்தை 24 முறை சொல்லி பயணம் செய்ய வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்