உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது.

• மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப்புண், உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

• மணத்தக்காளி இலையை கீரை போல் கடைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்னை, மலச்சிக்கல் தீரும்.

• மணத்தக்காளி இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் கட்டிவந்தால் கட்டி, வலி, வீக்கம் போன்றவை மட்டுப்படும்.

• வியர்வை, சிறுநீர் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு.

மணத்தக்காளி காயை பறித்து சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வற்றலாக சாப்பிட்டால் சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும். மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கும் மணத்தக்காளி கீரை நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்