வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது.
• மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப்புண், உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
• மணத்தக்காளி இலையை கீரை போல் கடைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்னை, மலச்சிக்கல் தீரும்.
• மணத்தக்காளி இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் கட்டிவந்தால் கட்டி, வலி, வீக்கம் போன்றவை மட்டுப்படும்.
• வியர்வை, சிறுநீர் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு.
மணத்தக்காளி காயை பறித்து சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வற்றலாக சாப்பிட்டால் சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும். மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கும் மணத்தக்காளி கீரை நல்லது.