செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்த  பணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  கூலித்தொழிலாளி யான இவரது மகன் ஜீவானந்தம் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிபிஜா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

மேல்படிப்புக்காக  ஜீவானந்த் செக்குடியரசு நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதம்  சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி செக் நாடடில் உள்ள கல்லூரி விடுதியில்  ஜீவானந்தம் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜீவானந்தம் பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர். மேலும் அவர் உடலை அங்கிருந்து கொண்டுவரவும் கல்லூரி நிர்வாகம் உதவவில்லை என்று சொல்லப்படுகிறது.

 எனவே ஜீவானந்தம் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் எனவும் ஜீவானந்தம் மரணத்திற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஜீவானந்தத்தின்  மனைவி பிபிஜாசெல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிபிஜாசெல்வம் தன் கணவர் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று  கோரிக்கை மனு அளித்துள்ளார்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்