உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!

உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!

கற்றாழை மடல் தேவையான அளவுக்கு எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும். மடலை சீவிவதற்கு முன்பு அதை இரண்டாக நறுக்கி சுத்தமான நீரில் கழுவி எடுக்கவும். கற்றாழயில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் நீங்கும்.

முகத்துக்கு க்ரீம் போடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்த லாம். இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தின் நிறம் மாறுகிறது. முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி பருக்கள் உண்டாகாமல் தடுக்கிறது. சரும சுருக்கங்கள் உண்டாகாமல் சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த ஜெல்லை கூந்தல் ஷாம்புவுடன் கலந்தும் பயன்படுத்த லாம். இவை சருமத்தை போலவே கூந்தலையும் மிருதுவாக்குகிறது.

கற்றாழை தோலின் மீது இருக்கும் முள்ளை சீவி எடுத்து இரண்டாக வெட்டி பிறகு ஸ்பூன் உதவியு டன் உள்ளிருக்கும் நுங்கு பகுதியை முழுவதும் எடுத்துகொள்ளலாம். கற்றாழையின் அடிப்பாகம் தவிர எஞ்சியிருக்கும் இதர பகுதியில் ஜெல்லை சேமிக்கலாம். பிறகு அதை எக் பீட்டர் கொண்டு நன்றாக அடித்து ஜெல் போன்ற நுங்கை கரைத்து மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய சாறுடன் எலுமிச்சை சாறு, வைட்டமின் இ மாத்திரை நான்கு, க்ளிசரின்,குங்குமப்பூவை பொடி செய்தும் சேர்க்கலாம். போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் வைத்து அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்தால் கற்றாழை ஜெல் தயார். இந்த கற்றாழை ஜெல்லை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜுக்குள் பயன்படுத்தும் போது ஒரு மாதம் வரையும் இது நன்றாக இருக்கும். 

கற்றாழை சாறை கடலை மாவு, பாசிபருப்பு மாவு சந்தனத்தூள், முல்தானிமெட்டி, மஞ்சள் தூள் என்று அழகு பொடி அனைத்திலும் கலந்து பயன்படுத்தலாம். எந்தவிதமான பக்க விளைவும் இல்லாதது இது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்