தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

* தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்

* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

* நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

* தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்திப் பட்டையை ஊற வைத்த நீரால் ஆறாத புண்ணைக் கழுவி வர, புண்கள் ஆறும்.

* அத்திப் பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் கொடுக்க சிறுநீரில் இரத்தம் போவது நிற்கும். இரத்த பேதி மாறும். வயிற்றுக் கோளாறுகள் கூட நீங்கும்.

* அத்தி விதைத்தூளில் நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்

* உலர் அத்திக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நோயுற்ற கல்லீரல் சீரடையும்.

* அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும்.

* அத்திப் பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.

* அத்திக்காயை அரைத்து, அரிசி கழுவிய நீருடன் பருகச் செய்தால் வெறிநாய் நஞ்சு நீங்கும்.

* அத்தித் தளிர் விதையை உண்டு வந்தால் விந்து கட்டுப்படும். அத்துடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் நீங்கும்.

* அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் பிரமேகம், வாதநோய்கள், சூலை தீரும்.

* வெந்தயக் கீரையுடன் அத்திப் பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.

* உடம்பில் வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் அத்திப்பாலை தடவி வர வீக்கம், மூட்டு வலி மாறும்.

* அத்திப் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும்.

* அத்திக்காயை உண்ண உதட்டில் வெடிப்புகள் இருந்தால் தீரும்

* அத்திப்பாலை மூட்டு வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.

பின்குறிப்பு : சிறுநீர் கல் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தவிர்க்கவும். எந்தவகையிலும் அத்தியை பயன்படுத்தக் கூடாது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்