இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
· தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு பலம் அடைகிறது. எலும்பு முறிவு, எலும்பு மெலிவு போன்ற பிரச்னைகள் குறையும்.
·
ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மைகள் தாம்பூலத்தில் உள்ளது. அதனால் சாப்பிட்ட உணவு விரைவில் செரிக்கிறது.
·
நரம்பு சுறுசுறுப்புக்கும் மூளை புத்துணர்ச்சி அடைவதற்கும் தாம்பூலம் உதவிகரமாக இருக்கிறது.
·
நெஞ்சில் கபம், இருமல் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும் தன்மையும் தாம்பூலத்துக்கு உண்டு.
தாம்பூலம் போடுபவர்கள் எந்தக் காரணம் கொண்டும் புகையிலை சேர்க்கக்கூடாது. மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே தாம்பூலம் உபயோகிக்க வேண்டும்.