தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

• இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு விபரம் தெரியும்வரை இரவு விளக்கு இருக்கட்டும்.

• குளிர், வியர்வை, அசெளகரியமான படுக்கை போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். 

• அடிக்கடி கனவு கண்டு விழித்து அழுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு இனிமையான சூழல் உருவாக்கி, பாட்டுப்பாடி அல்லது கதைகள் சொல்லி தூங்கவைக்க வேண்டும்.

• தாய் வேறு அறையில் தூங்குவதாக இருக்கலாம். தான் தூங்கினால் தாய் காணாமல் போய்விடுவாள் என்ற பயம் காரணமாகவும் குழந்தை விழித்துக்கொண்டே இருக்கலாம்.

இவை தவிர உடல் நலமின்மை, வயிற்றுப் பசி போன்றவையும்கூட, தூக்கம் வராமைக்கு காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தை கண்டறிந்து நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்