கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

சளி, ஜலதோஷம் ஏற்பட்டவுடன் குழந்தைகளின் உடல் முழுவதும் தைலம் தடவி ஒத்தடம் கொடுப்பது சகஜம். இது குழந்தைக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் பெரும்பாலான தைலங்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே தயாராகிறது. மேலும் இவற்றில் கற்பூரம் ஒரு மூலப்பொருளாக பயன்படுகிறது. இது அளவுக்கு மீறும்போது குழந்தைக்கு வலிப்பு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஜலதோஷம், சளி போன்ற எந்த ஒரு உடல்நலக் குறைபாடு என்றாலும் மருத்துவர் ஆலோசனையில் மருந்து எடுத்துக்கொள்வதே நல்லது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஒரு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நிச்சயம் தைலம் தடவவே கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்