கொரோனாவுக்கு செப்டம்பரில் தடுப்பூசி..! ஒரு ஊசியின் விலை ரூ.1000! அறிவித்தது இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனி!

கொரோனாவுக்கு செப்டம்பரில் தடுப்பூசி..! ஒரு ஊசியின் விலை ரூ.1000! அறிவித்தது இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனி!

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெற்று தடுப்பூசிகள் தயாராக மேலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று தான் அனைத்து நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவம் செப்டம்பர் மாதம் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி அடார் பூனாவல்லா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செரம் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழு பேருக்கு கொரானா தடுப்பூசியை சோதனை முயற்சியாக செலுத்தியுள்ளது என்றார்.

பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்று மட்டும் அல்லாமல் சீனா, அமெரிக்கா, இந்தியர்களுக்கும் கூட கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. எப்படியும் செப்டம்பருக்குள் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றுவிடும். அதன் பிறகு இந்தியா மட்டும் அல்ல உலகிற்கே கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அடார் பூனாவல்லா கூறியுள்ளார்.

விலையை பொறுத்தவரை தற்போத துல்லியமாக கூற முடியாது, ஆனால் ஒரு தடுப்பூசியின் விலை தோராயமாக இருக்கலாம் என்று அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்