கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான இந்த வடையை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான இந்த வடையை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – அரை கப்,

புளிக்காத புது தயிர் – 1 கப்,

பால் – கால் கப்,

உப்பு – ருசிக்கேற்ப,

மல்லித்தழை – சிறிது,

மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,

காராபூந்தி (அ) ஓமப்பொடி – (விருப்பத்துக்கேற்ப) சிறிது,

எண்ணெய் – தேவையான அளவு,

கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க: முந்திரிப்பருப்பு – 4,

பச்சை மிளகாய் – 2,

சீரகம் – கால் டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள்.

கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள். உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்). அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்