2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பல புள்ளி விவரங்களை அரசு வெளியிடாத நிலையில், தற்போது தற்போது சில விவரங்கள் கசிந்துள்ளன.

அந்த வகையில் 2,700 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன என்றும், 1200 தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை  பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை என்றும், அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில்1500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக  கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்