Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்திய ராணுவத்தில் ஓரினச்சேர்க்கை! ராணுவத் தளபதி பதில்!

   ஆண்டுதோறும் அவர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அதேபோல் வியாழக்கிழமை அன்று டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சீனா பாகிஸ்தான் உடனான எல்லை சூழலை இந்தியா மிகவும் சிறப்பாக கையாண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர் காஷ்மீர் பிரச்சனையும் எடுத்துரைத்தார்.
   காஷ்மீர் பிரச்சனையானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஆனது என்று கூறிய அவர் இதில் மூன்றாம் நபர் தலையிடக்கூடாது என்று கூறினார். வன்முறை துப்பாக்கி அனைத்தையும் விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தார். தீவிரவாதிகள் யார் மக்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் மிகுந்ததாக இருப்பதாக பிபின் ராவத் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தில் ஒரு சிலர் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறிய பிபின் ராவத். 
வேற்றுமையை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தெரிவித்தார். அப்போது ஓரினச்சேர்க்கை ராணுவத்தில் அனுமதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த பிபின் ராவத் இந்திய ராணுவம் பழமையான ஒன்று எனத் தெரிவித்தார். எனவே இதில் ஓரினச்சேர்க்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். 
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதை ராணுவத்தில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை அழும்போது கண்ணீர் வருமா – குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர் – குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும்

tamiltips

நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

tamiltips

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கணும்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடணும்! ஏன்?

tamiltips

மாணவர்களிடம் இனி ஜாதியை கேட்க கூடாது! பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் சுயநலவாதியாக இருக்க காரணம்! ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

tamiltips