40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார்.
இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.