காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பில்லை சாப்பிட்டுவந்தால்.. நீங்கள் அன்றாடம் போடும் மாத்திரைகளை குறைத்துவிடலாம்!

காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பில்லை சாப்பிட்டுவந்தால்.. நீங்கள் அன்றாடம் போடும் மாத்திரைகளை குறைத்துவிடலாம்!

கருவேப்பிலையில் விட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் கருவேப்பிலை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும், கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கும் பயன்படுகிறது.

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையை சரி செய்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
கருவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 15 கருவேப்பிலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். அடர்த்தியாக முடி வளர்வதை உணர முடியும். நரைத்த முடி கருமையாக மாறும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்