ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். யாரும் தன்னைவிட பெரியவர் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து பெற்றோர் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுக்கு அதிக அறிவு இருக்கிறது என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது.
தனக்கு படிப்பு சரியாக வராது என்று நினைத்துக்கொண்டு, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது. அந்தக் குழந்தைக்கு எத்தனை சிறப்பாக சொல்லிக்கொடுத்தாலும் படித்து, நல்ல மதிப்பெண் பெறுவதற்குத் தெரியாது. தன்னையே மட்டம் தட்டிக்கொள்ளும். தான் எந்த வெற்றிக்கும் லாயக்கு இல்லை என்று நினைத்துக்கொண்டு மனநல பாதிப்புக்கும் ஆளாகலாம்.
ஆகவே, எந்தக் காரணம் கொண்டும் பிள்ளைகளை வேறு ஒரு பிள்ளையுடன் ஒப்பிட்டுத் திட்டவே செய்யாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை, தனித்தன்மை உண்டு என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.