மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

ஜீரணக்கோளாறுக்கு மிகவும் நல்லது. அதனால் உடல் எடை குறையவும் நரம்புத்தளர்ச்சி நீங்கவும் பயன்படுகிறது. வயிற்று வலி, நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகள் நீங்கவும் செய்யும். தோலில் ஏற்படும் சகல பிரச்னைகளுக்கும் அருகம்புல் நல்ல மருந்து. 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குளறுபடிகள் சரியாகும்.  மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்