சொல்ல சொல்ல கேட்காம பண்ணுனாங்க…!! முகத்தில் காயங்களுடன் பிக்பாஸ் ரைசா வெளியிட்ட பதிவு..!! காரணம் என்ன..?? உண்மையை உடைக்கும் ரைசா..!!

சொல்ல சொல்ல கேட்காம பண்ணுனாங்க…!! முகத்தில் காயங்களுடன் பிக்பாஸ் ரைசா வெளியிட்ட பதிவு..!! காரணம் என்ன..?? உண்மையை உடைக்கும் ரைசா..!!

பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்துக்கொள்ள அடிக்கடி பார்லருக்கு பல ஆயிரம் செலவு செய்து வருவது தான் நடிகைகளின் வாடிக்கை. இப்படி ஒரு நிலையில் பியூட்டி பார்லர் சென்று பேஷியல் பண்ணதால் தற்போது ரைசாவின் முகம் அலங்கோலமாக மாறி இருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புலம்பி தள்ளியுள்ளார் ரைசா.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான்  நான்காவது சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு  பலரும் ஷாக் ஆனார்கள். இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது.

இதை தொடர்ந்து நான் அவரிடம் பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பகிர்ந்துள்ளார் ரைசா. இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரம் கழித்து மற்றொரு வீடியோவில் நடிகை ரைசாவின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துள்ளதாக காண முடிகிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!