கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா? டோண்ட் ஒர்ரி! இத மட்டும் செய்யுங்க!

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா? டோண்ட் ஒர்ரி! இத மட்டும் செய்யுங்க!

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை
கண்டறிய முயன்றால், இதனை சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிதாக இருக்கும்.

கருவளையம் உருவாக முக்கிய காரணமாக
இருப்பது தூக்கம்தான். தினமும் ஆறு முதல் 7 மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். வாரம்
ஒரு முறை அரை மணி நேரம் வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது நல்ல
பலன் கொடுக்கும். கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து
தேய்த்து வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

கண்ணுக்கு நல்ல தரமான மைகளையே பயன்படுத்த
வேண்டும், தினமும் அவற்றை படுக்கப் போகும் முன்னர் நன்றாக கழுவிவிட வேண்டும். 
அதேபோன்று கரும்புள்ளிகள் முகம் மட்டுமின்றி
உடல் முழுவதும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கரும்புள்ளியால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆரஞ்சு பழத் தோலை காயவைத்து அத்துடன் பயத்தம் மாவு சேர்த்து அரைத்துப்
பூசி காய வைத்து குளித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோன்று ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு துருவல் சாறுடன்
அரை டீஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.  இந்த கலவையை தினசரி காலை, மாலை இரு வேளையும் முகம்
முழுவதும் நன்கு தடவவும். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்து வந்தால், சில வாரங்களிலேயே
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி வித்தியாசத்தை உணர முடியும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்