கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்..! ஒரு பரபர ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்..! ஒரு பரபர ரிப்போர்ட்!

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்க சேர்ந்த வைரஸ் சூழலியல் ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்டெர், கொரோனா கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். அதில், முக்கியமாக டீ, காபி பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அட்டைபெட்டிகளில் 24 மணி நேரம் வரை கொரோனா கிருமி படிந்திருக்கும்.

மேலும், பிளாஸ்டிக் பாட்டிகல்களில் அதிகப்பட்சமாக 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் படிந்திருக்கும் என தெரிவித்துள்ளார். தாமிரத்தால் ஆன பொருள்களில் 4 மணி நேரமும், எவர் சில்வரால் ஆன பொருள்களில் 13 மணி நேரமும், பாலி புரொபைலின் வகை பிளாஸ்டிக் பொருள்களில் 16 மணி நேரமும் கொரோனா கிருமி உயிர்ப்புடன் இருக்கும்.

இப்படி கண்ணுக்கு தெரியாமல் கொரோனா கிருமி படர்ந்திருக்கும் பொருட்களை நாம் தொடுவது நிகழக்கூடும் என்பதால் தான், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 23 முறை நாம் நமது முகங்களை கைகளால் தொடுகிறோம் என்கிறது ஆய்வு.

கண், மூக்கு பகுதிகளை சில விநாடிகளுக்குள் தலா 3 முறையும்‌, காது பகுதிகளை ஒரு முறையாவது தொட்டு விடுகிறோம். வாய், கன்னம், தாடை அவற்றோடு தலைமுடியையும் தலா நான்கு முறை விரல்களால் தொடுகிறோம். கொரோனா வைரஸ் படர்ந்துள்ள பொருட்களை தொட்டுவிட்டு, முகப் பகுதிகளை தொடுவதன் மூலம் வைரஸ் கிருமி பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

பல ஆயிரமாயிரம் வைரஸ் துகள்கள் உடலுக்குள் சென்றால் மட்டுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை நேரடியாக சந்திக்கும்போது பெரிய அளவு பாதிப்பு நிகழும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நோயாளிகள் மீண்டு வந்தாலும், அவர்களது உடலில் அந்த வைரஸ் கிருமி 8 முதல் 37 நாட்கள் தங்கியிருக்குமாம்

-Darwin Science Club Team

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்