முந்திரி பழம் சாப்பிடுவீர்களா? ஸ்கர்வி நோய் வரவே வராதாம் !!

முந்திரி பழம் சாப்பிடுவீர்களா? ஸ்கர்வி நோய் வரவே வராதாம் !!

முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். அதன்பிறகு வாடை மாறிவிடும். வெளிநாடுகளில் முந்திரி பழம் ஜூஸ் பிரபலமாக இருக்கிறது.

• வைட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக முந்திரி பழத்தில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

• ஆன்டி ஆக்சிடன்ட், பீட்டா கரோட்டீன் போன்றவை நிரம்பியுள்ளதால் எலும்புகள் வலுவடைய பயன்படுகிறது.

• நார்ச்சத்து நிரம்பியது என்பதால் அஜீரணக் குறைபாடு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளைத் தீர்த்து பசியை அதிகரிக்கிறது.

• வைட்டமின் சி குறைபாடு காரணமாக ஏற்படும் ஸ்கர்வி நோயை குறைப்பதற்கும் முந்திரி பழம் பயன்படுகிறது.

முந்திரி பழத்தை அப்படியே சாப்பிட்டால் தொண்டையில் கரகரப்பு ஏற்படும். அதனால் வேகவைத்து அல்லது உப்பு நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!