பல முன்னனி நடிகர்களை ஓரங்கட்டிய பூவையார்!.. சிறு நரியல்ல சீறும் புலியென வந்து விழும் பாரட்டுக்கள்…

பல முன்னனி நடிகர்களை ஓரங்கட்டிய பூவையார்!.. சிறு நரியல்ல சீறும் புலியென வந்து விழும் பாரட்டுக்கள்…

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு சென்றாலும், அதில் நட்சத்திரமாக ஜொலிப்பது சில பேர்தான்… அதென்னவோ? சீரியலிலும், நிகழ்ச்சியிலிலும் தங்கள் மனதை கவர்ந்தவர்கள், படங்களில் ஏன் ஜெயிப்பதில்லை என தெரியவில்லை.. காரணம், சின்னத்திரை வேறு, திரையுலகு வேறு என, சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வருவோர் ஏராளம்…

ஆனால், அதையெல்லாம் முறியடித்து, திரைத்துறையிலையும் தங்கள் பதிவை அழுத்தமாக சிலர் பதித்திருக்கின்றனர்… நடிகர் சந்தானத்தில் ஆரம்பித்து, நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் வரை அதற்கு சான்று… இப்போது இதே வரிசையில் மற்றும் ஒருவர் இடம் பெற்றுள்ளார்… இந்த சின்ன வயதிலேயே இப்படி ஒரு சாதனையா? என பார்ப்போரை ஆச்சர்ய பட வைத்திருக்கிறான், நம் சூப்பர் சிங்கர் பூவையார்…

பூவையார் முதன் முதலில், விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தன்னுடையை தனிப்பட்ட திறமையை கானா பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி, இரண்டாவது பரிசை பெற்றார்… அந்த வெற்றிக்கு பின், விஜயுடன் இணைந்து வெறித்தனம் பாடலை பாடியிருந்தார்… அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, நட்பே துணை படங்களில் எல்லாம் பாடியுள்ளார்… அதற்கடுத்து இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து, பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார்…

இப்படி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பின் தற்போது, இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கி, இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஏ ஆர் ரஜுமானின் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் பாடலின் காட்சியமைப்புக்கு நடித்துள்ளார்… இதை ரஹ்மான் அவர்களே அவருடைய பக்கத்தில், பூவையார் உடன் இணைந்து செல்பி எடுத்து அவரை பாராட்டியுள்ளார்… இதில் கேப்ரியாலவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது…

இதனால் பல முன்னனி நடிகர்களுக்கு கூட, கிடைக்காத இந்த அதிர்ஷ்ட வாய்ப்பால், பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் நம் பூவையார்… மேலும் இது போன்ற தகவல்களுக்கு, நம் தளத்துடன் இணைந்திருங்கள்…

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!