எவ்ளோ பெரிய ஸ்டாராக இருந்தாலும் சரி…. அந்த மாறி நடிக்கவே மாட்டேன்..!! முரண்டு பிடிக்கும் திரிஷா…!! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்…!!!

எவ்ளோ பெரிய ஸ்டாராக இருந்தாலும் சரி…. அந்த மாறி நடிக்கவே மாட்டேன்..!! முரண்டு பிடிக்கும் திரிஷா…!! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்…!!!

தெனிந்திய திரை உலகில் வெற்றி கண்டுள்ள நடிகை திரிஷா சமீபத்தில் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட விட்டாலும் எளிமையான முறையில் கொண்டாடினார் மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்தனர் இப்படியே போய்க் கொண்டிருக்க நடிகை திரிஷா தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் புதிய படத்தை வேண்டாம் என தூக்கி எறிந்து உள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர் நடிகர் சிரஞ்சீவி இவர் தற்பொழுது ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்திற்கு “ஆச்சார்யா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து வருகிறார். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் போது அந்தப் படத்தை வேண்டாம் என திரிஷா கூறி உள்ளது சினிமா ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான திரிஷாவுக்கு ஆரம்பத்திலிருந்து இருந்து இரண்டு மொழிகளிலும் டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடிக்க ஆரம்பித்தார். அதிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அங்குமிங்குமாக நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டு வந்தார். இவருக்கு  தற்போது முன்னணி நடிகரின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைப்பதால் முக்கியமான படங்களாக இருந்தாலும் அதை மறுத்து வருகிறார்.

இது போலவே தான் தற்பொழுது சிரஞ்சீவி நடிக்கும் “ஆச்சார்யா” படத்தில் ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் கமிட் ஆன நிலையில் தற்போது த்ரிஷாவை கமீட் செய்வதால் அவர்களை விட குறைவான முக்கியத்துவம்  இருக்கும் அதோடு அதில் நடிக்கும் ஒன்றிற்கும் புரியோஜனம் இல்லை என்பதால் அந்தப் படத்தை வேண்டாம் என்று முடிவு பண்ணிவிட்டார் போல.

சினிமாவில் முன்னணி நடிகை 18 வருஷம் அனுபவம் ஆகியவை எல்லாவற்றையும் யோசித்து பார்த்து எப்படி ஒரு சின்ன ரோல் கொடுக்கிறார்கள். அது போன்று பல அவமானம் பட்டதால் தற்போது அந்த மாதிரி வரும் படங்களை திரிஷாவும் அதை தூக்கி எறிந்து விடுகிறார். இது தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும் என சில கோலிவுட் வாசிகள் முணுமுணுக்கிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!