Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் காலம்! குளிர்பானங்கள் மூலம் பரவும் பல நோய்கள்! உஷார் மக்களே!

சுகாதாரமற்ற நீரால் தயாரிக்கப்படும் பொருள்களைச் சாப்பிட்டால், என்ன விளைவுகள் உண்டாகும் என்பதற்கு, சமீபத்தில் நாகை மாவட்டத்தில் நடந்த சம்பவம் சாட்சியமாய் இருக்கிறது. சீர்காழி அருகே, வானகிரி என்னும் கிராமத்தில் நடந்த திருவிழாவில், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சுகாதாரமற்ற நீரில் தயாரிக்கப்பட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். 

”டயேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீரில் இருந்துதான் உருவாகின்றன. அதனால் குடிக்கும் நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். வாட்டர் டேங்குகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர, குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்கவைத்துப் பருக வேண்டும். தேவைப்படும் நேரத்தில் கொதிக்க வைக்காமல், முன்பே தேவையான அளவு கொதிக்கவைத்து, ஆறவைத்துத் தேவைப்படும்போது குடித்துக்கொள்ளலாம்.
பொதுவாகக் கோடைக்காலங்களில் தேவைக்கதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அவை சுகாதாரமான குடிநீராக இருக்க வேண்டியது அவசியம். தவிர, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர், தயிர் போன்றவற்றை அருந்த வேண்டும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

tamiltips

மைதா ஏன் நல்லதல்ல? எதிலிருந்து ஏடுடக்கப்படுவது அது? உடலை என்ன தான் செய்கிறது?

tamiltips

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

tamiltips

இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!

tamiltips

ஆழ்கடலில் 30 கிலோ மீட்டரை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்த 10 வயது வல்லவன்!

tamiltips

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

tamiltips