Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பலமான எலும்புக்கு சீதாப்பழம் – பிரசவ வலியைக் குறைக்குமா குங்குமப்பூ – தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப்பூ கட்டுங்க

· இனிப்பு சுவை நிரம்பிய சீதாப்பழம் ரத்த உற்பத்தியை பெருக்குவதுடன் உடலுக்கு வலிமையும் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

· வைட்டமின் சி, கால்சியம்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் எலும்புகள் பலமடைவதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவிபுரிகிறது.

Thirukkural

· சீதாப்பழத்தின் இலைகளை கொதிக்கவைத்துகசாயமாக தயாரித்து குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். கருச்சிதைவும் கட்டுப்படும்.

· இதனை அடிக்கடி சாப்பிட்டுவந்தால்இதயம் பலப்படும். ஆஸ்துமா, காசநோய் போன்றவை கட்டுப்படும்.

பிரசவ வலியைக் குறைக்குமாகுங்குமப்பூ

ஒருபெண் கர்ப்பம் அடைந்தாலே, ‘குங்குமப்பூ சாப்பிட மறந்துடாதே…’ என்பார்கள். ஏனெனில் இதில்நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.

· குழந்தைசிவப்பாக பிறக்கும் என்பது உண்மையில்லை என்றாலும் கர்ப்பிணித்தாய் குங்குமப்பூ சாப்பிடுவதால்ரத்தம் சுத்தமடைகிறது.

· ரத்தசோகையைப்போக்கும் தன்மை உண்டு என்பதால் குழந்தை வழக்கத்தைவிட பளீச் நிறத்தில் பிறக்கும் என்பதுஉண்மைதான்.

· பிரசவவலியின் தன்மையைக் குறைத்து சுகப்பிரசவம் நடப்பதற்கும் குங்குமப்பூ உதவுகிறது.

· குங்குமப்பூவைபாலில் காய்ச்சி அருந்தினால் ஜீரணசக்தி அதிகரிப்பதுடன், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள்வராது.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்தவேண்டுமா? மல்லிகைப்பூ கட்டுங்க

பெண்களின்மனம்கவர்ந்தது மல்லிகைதான். அதனால் இதனை ஆண்களும் விரும்கிறார்கள். இதன் மருத்துவக்குணங்களைப்பார்க்கலாம்.

· கொஞ்சம்மல்லிகையை எடுத்து மார்பில் மூன்று நாட்கள் வைத்து கட்டிவந்தால், தாய்ப்பால் சுரப்புநின்றுவிடும்.

· பெண்களுக்குகாதலையும் ஆண்களுக்கு காமத்தையும் தூண்டக்கூடிய வாசனை மல்லிகையில் உண்டு. இது நரம்புகளைத்தூண்டுகிறது.

· உடலில்எங்கேனும் வீக்கம், தடிப்பு ஏற்பட்டால் மல்லிகையை அரைத்துப் பூசலாம். தலைவலியையும்தீர்க்கிறது.

· மல்லிகைச்சாறுவாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. அத்துடன் மன நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும்இதற்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

tamiltips

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

tamiltips

மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

tamiltips

கரப்பான் பூச்சிக்குப் பயப்படுபவரா நீங்கள்?இதோ உங்களுக்குத்தான் ஆலோசனை!!

tamiltips

தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் ??

tamiltips

அரிசியால் அழகிற்கு இவ்ளோ நன்மைகளா? இது தெரியாம போச்சே..

tamiltips