Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அடிக்கடி கோபம் டென்ஷன்னு மன அழுத்தம் ஆகுறீங்களா! இசை சிகிச்சை பற்றி தெரிஞ்சிக்கோங்க?

மன அழுத்தம் என்பது எண்ணங்கள், உடல், மனநிலை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அசாதரண மாற்றங்களால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் மற்றும் பசியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆய்வுகளின்படி மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைவிட இசை சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை தருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இசை சிகிச்சை இதயத்துடிப்பின் வேகத்தை குறைக்கிறது, சுவாசம், இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த மனநிலையிலிருந்து விலக்கு அளிப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

பேசு சிகிச்சையைவிட இசை சிகிச்சை மேம்பட்டதாக சிகிச்சையாளர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போது மூளையிலுள்ள நியோகார்டெக்ஸ் செயல்பட வைக்கிறது. இது மனிதர்களை அமைதி நிலைக்கு தள்ளுகிறது. மேலும் திடீரென்று உணர்ச்சி வசப்படுவதையும் குறைக்கிறது.

பாடல் எழுதுவது என்பது உங்களது படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கிறது. இதுபோன்று இசை சிகிச்சை முறையில் உள்ள பல்வேறு உக்திகள் மனநோய்களை உடையவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

முதலில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட உபகரணங்களின் இசை இசைக்கப்படுகிறது. இந்த முறையில் அவர்களது உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்துகிறார்கள். சிகிச்சையாளர்கள் இந்த இசையின் மூலமாக நோயாளிகளிடம் உரையாடலைத் தொடங்குகிறார்கள் 8 முதல் 10 அமர்வுகள் வரை சிகிச்சையாளர்கள் இசை சிகிச்சையை கொண்டு செல்கிறார்கள்.

Thirukkural

இசை சிகிச்சை தங்கள் உணர்ச்சிப் பெருக்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இசை முக்கியப் பங்காற்றுகிறது. சிகிச்சையாளர்களுக்கும் நோயாளிக்கும் இடையேயான நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக நோயாளிக்கு தன்னம்பிக்கை சிகிச்சையாளர்களால் ஏற்படுத்த விரும்புகிறது.

அதே தன்னைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இசை சிகிச்சை பாலமாக அமைகிறது.
ஒவ்வொரு வகையான இசையும் ஒரு வகை நரம்பியல் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக மன அழுத்ததில் இருக்கும் போது கிளாசிக்கல் இசை மன அமைதியை ஏற்படுத்துவதாக அமையும்.

அதே நேரத்தில் ராக் வகை இசைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.இசை மனதுடன் ஒன்றிணைந்து இயங்கக்கூடியது. சில பாடல்கள் கேட்டவுடன் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். சில பாடல்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். சில பாடல்கள் புத்துணர்ச்சி அல்லது மன ஓய்வைத் தரும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கடைகளில் விற்கும் தீபாவளி லேகியம் சாப்பிடலாமா? யாரெல்லாம் தீபாவளி லேகியம் சாப்பிடக்கூடாது?

tamiltips

குழந்தைகள் முன்னாடி என்ன பேசக்கூடாது என்ன செய்யகூடாது! பெற்றோரே தெரியுமா!

tamiltips

கட்சிக்கு கலயத்தில் பழைய சோறு! ஜிஎஸ்டியுடன் ரூ.50! மதுரை ஓட்டலில் சுடச்சுட விற்பனை!

tamiltips

மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

tamiltips

குழந்தையின் கண்கள்

tamiltips

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips