Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

   கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான அளவு  ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை.  இதுபோன்ற நேரங்களில்  மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். உடனடியாக ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.

   மாரடைப்பு நோய்க்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில்முக்கியமாக இடது தோளில் 
 
ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள்  இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள்.

இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.    கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.

 மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.

Thirukkural

ஆனால், இதுபோன்ற பிரச்னை, வலி எதுவுமே இல்லாமல்  மாரடைப்பு  ஏற்படுவதும் உண்டு.  இதைஊமை தாக்குதல்என்பார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மிரட்டும் கஜா 2! நாளை வங்க கடலில் முக்கிய சம்பவம்! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips

ரயில் பயணமா? 20 நிமிசம் முன்னாடியே ஸ்டேசனும் போகனும்! இல்லனா ரயில்ல போக முடியாது!

tamiltips

ராம்நாடு முழுக்க தண்ணி பஞ்சம்!ஆனா‌ இந்த கிராமத்துல மட்டும் 3 போகம் அமொகம்! நீர் மேலாண்மையில் அசத்தும் செவல்பட்டி மக்கள்!

tamiltips

பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

tamiltips

அதென்ன இந்துப்பு? அது மட்டும் ஏன் ஆபத்து இல்லை தெரியுமா?

tamiltips

யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தை பிறக்கும்னு தெரியுமா?

tamiltips