Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ராம்நாடு முழுக்க தண்ணி பஞ்சம்!ஆனா‌ இந்த கிராமத்துல மட்டும் 3 போகம் அமொகம்! நீர் மேலாண்மையில் அசத்தும் செவல்பட்டி மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட செவல்ப்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் மிளகாய் வெங்காயம், பாசிப்பருப்பு, உளுந்து, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவறறை சாகுபடி செய்து வருகின்றனர்.

செவல்ப்பட்டி கிராமத்தில் முன்னோர்கள் ஊர் கூடி தங்களது கிராமத்தில் உள்ள ஒரு ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்தி அந்த ஊரணியை சுற்றிலும் முள்வேலிகளை அமைத்து தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருந்தன. அந்த வகையில்  மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கால்வாய் வழியாக ஊரணிக்கு கொண்டு சென்று ஊரணியை சுற்றிலும் முள்வேலிகளை அமைத்து சுத்தமாக பாதுகாத்து சுகாதாரமான முறையில் பயன்படுத்தி வந்தனர்.

தற்போதும் அந்த ஊரணியில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆடு மாடு உள்ளிட்ட எந்த ஒரு கால்நடைகளையும் அனுமதிப்பதில்லை. மனிதர்கள் கூட குடிநீர் தேவையை தவிர்த்து மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தாத வகையில்கட்டுபாட்டு உணர்வுடன் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து போன நிலையில் பல்வேறு கிராமங்களில் தற்போது கோடை காலத்தில் நிலவி வருகிறது.  கடும் குடிநீர் பஞ்சம் உள்ளது. இதனால் மக்கள் பரிதவித்து வரும்  நிலை அங்கு தொடர் கதையாக உள்ளது.

இவற்றிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக  செவல்ப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு குடிநீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

Thirukkural

செவல்ப்பட்டி கிராமத்தை போன்று மற்ற கிராமங்களும் தங்களது குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள தங்களது கிராமத்தில் உள்ள ஊரணியை தூர்வாரி மழை காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து முள்வேலிகளை அமைத்து பயன்படுத்தினால் எந்த ஒரு காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை இருக்காது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த கீரையின் இலை,பூ,பட்டை,வேர் அனைத்துமே மருந்து! இதை சாப்பிட்டு வந்தால் நோயே வராது!

tamiltips

வயிற்றை பாதுகாக்கும் மணத்தக்காளி !!

tamiltips

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

tamiltips

வீடு மாற்றினால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் சுயநலவாதியாக இருக்க காரணம்! ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

tamiltips

வரலாற்றில் முதல் முறையாக சாதி – மதம் அற்றவள் என சான்றிதழ்! இளம் பெண் வரலாற்று சாதனை!

tamiltips