Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் கொளுத்துவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

✠ தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும் (பச்சை) கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.

✠ தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள். தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.

✠ காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும். இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும். தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.

✠ கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது. கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும். மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜ்யோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார். இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

tamiltips

பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

tamiltips

முதியோர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ??

tamiltips

இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

tamiltips

மினிமலிஸம் “… நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !

tamiltips