Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

சின்ன சின்ன உடல் நலக்குறைவு வரும்போது மருத்துவமனை சென்று ஏன் செலவிடவேண்டும் என்று யோசிப்பவர்கள் அருகில் இருக்கும் மருந்துக் கடைக்கு சென்று மருந்தாளுநர் படிப்பை மட்டுமே படித்த அவரிடம், மருத்துவரிடம் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி, மாத்திரை வாங்கி வந்து உட்கொள்வர். அந்த வலி நிவாரணி மாத்திரைகள் அன்று சரியானது போல் தோன்றும்.

மறுநாள் அதே பிரச்சனை, அதே மருந்துக்கடை, அதே மருந்து என மருத்துவரிடம் சென்றால் என்ன செலவு ஆகி இருக்குமோ அதே செலவை மருந்துக்கடையை நம்பி செலவு செய்வர். பின்னர் குணம் ஆகாமல் கடைசியாக மருத்துவமனைக்கு சென்று மறுபடியும் செலவு செய்வர். 

பெரும்பாலும் மாத்திரை வாங்கும் வாடிக்கையாளர்களர் அதில் காலாவதியாகும் தேதி மட்டுமே பார்ப்பர். சிலர் அதுகூட பார்க்கத் தெரியாது. மாத்திரை வாங்கிய அடுத்த நொடியே வாயில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி முழுங்கிவிடுவார்கள்.

நீங்கள் வாங்கும் மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருக்கும். இதை யாருமே கவனித்து இருக்க மாட்டீர்கள். இந்த மாத்திரையை மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் சாப்பிட கூடாது என்பதே அர்த்தமாகும். எனவே சிவப்பு கோடு போட்டிருக்கும் மாத்திரைகளை மருந்து சீட்டு இல்லாமல், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வாங்கி போட்டுக்கொள்வது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் சிவப்பு கோடிட்ட மருந்துகளை உரிய மருந்து சீட்டை காட்டினால் மட்டுமே விற்க வேண்டும் என மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த ஒரு பொருள் போதும், உடம்பில் ஒரு வியாதியும் வராது!

tamiltips

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

tamiltips

கர்ப்பிணி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

tamiltips

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் இந்த செயல்கள் பிடிப்பதேயில்லை!

tamiltips

சங்க காலத்தில் புகழ்பெற்ற தினையில் என்னவெல்லாம் சத்து இருக்குது??

tamiltips

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

tamiltips