Tamil Tips
லைஃப் ஸ்டைல்

விலை உயர்ந்த கிரீம்கள் வேண்டாம்! நிரந்தர அழகை பெற வீட்டிலிருக்கும் இந்த பொருட்கள் போதுமே!

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும்,  மிருதுவாகவும் இருக்கும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து,  பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips

வலுவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என்ன செய்யனும் தெரியுமா?

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

tamiltips

தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

tamiltips

முடி வளரலனு கவலையா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!

tamiltips