Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மல்லிகைப்பூ இட்லி… வாடிப்போகாத காயகறிகள்..! சூப்பர் கிச்சன் டிப்ஸ்!

தேங்காயை துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்துவிடும்.

வாழைப்பு+, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பு+, வாழைத்தண்டின் நிறம் மாறாது, கறை பிடிக்காது, துவர்ப்பு நீங்கும்.

காய்கறிகள் வாடிவிட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகளின் வாடிய தன்மை மாறி புதியதாக இருக்கும். பாலாடை, தயிராடைகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய் மற்றும் மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கியவுடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்கும்போது வாடாமல் இருக்கும். வெந்தயக்கீரையை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

இட்லிக்கு மாவு அரைக்க, சுடு தண்ணீரில் அரிசியை ஊற வைத்தால் பத்து நிமிடத்தில் அரிசி ஊறிவிடும். அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.

Thirukkural

காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்ந்தால் கறைகள் போய்விடும். பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பு ஒட்டாது.  கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கிவிடும்.

புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.

எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும். ஒரு கப் நல்லெண்ணையை சூடாக்கி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை நசுக்கி சேர்த்து மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊற விட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது. புத்துணர்வும் கிடைக்கும்.

டீ தயாரிக்கும்போது டீ தூளுடன் ஐந்து புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும். மாதுளம் பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

2400 சதுர அடி பரப்பு! 3 அடி ஆழம்! பறவைகள் தாகம் தீர்க்க பிரத்யேக குளம்! நெகிழ்ச்சி சம்பவம்!

tamiltips

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

tamiltips

உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!

tamiltips

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி! இப்போ மாசம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கிறேன்! டிரெண்டிங் நான்சியின் வாழ்க்கை பயணம்!

tamiltips

அடடா!!! ஒப்போ -வின் அடுத்த அசரவைக்கும் ஆச்சர்யம் !!! – இதுதானா ???

tamiltips

குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

tamiltips