Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மிராஜ் சிங் ரத்தோர்! பிறந்த குழந்தைக்கு போர் விமாத்தின் பெயரை சூட்டிய தேசப்பற்று தாய்-தந்தை!

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய அதே தினத்தில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன தெரியுமா ? – மிராஜ்
புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியான சம்பவம் தேசத்தின் அத்தனை இதயங்களுக்கும் வலித்தது. உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குமுறல்களுக்கு இவ்வளவு விரைவில் தீர்வு கிடைக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
செவ்வாய் கிழமை காலை உறக்கத்தில் இருந்து எழுந்த இந்திய மக்களுக்கு கிடைத்த முதல் செய்தியே இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதி பராக்கிரமத் தாக்குதல் தான் இந்தத் தாக்குதலை நாடு முழுவதும் மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், வெற்றிப் பேரணி நடத்தியும் கோலாகலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்திய விமானப் படையினருக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்களையேல்லாம் விஞ்சி விமானப் படையினருக்கு வெகு சிறப்பான மரியாதையை செய்திருக்கிறார்கள் ராஜஸ்தானின் நகோர் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி.
தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர் மிராஜ். தங்கள் குழந்தையும் விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவான் என நம்புவதாக குழந்தையின் தந்தை மஹவீர் சிங் ரத்தோர் தெரிவித்தார். 
மகாவீரின் மனைவி சோனம் திங்கட் கிழமைக்கும், செவ்வாய்க் கிழமைக்கும் இடைப்பட்ட நள்ளிரவில் பிரசவ வலியெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நேரம் என்ன தெரியுமா? இந்திய விமானப் படையின் மிராஜ் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலைத் தொடங்கிய அதே அதிகாலைல் 3.30 மணி.
குழந்தை பிறந்த தகவல் பரவியதும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒருமித்து எடுத்த முடிவு குழந்தைக்கு மிராஜ் சிங் ரதோர் என பெயர் வைக்க வேண்டும் என்பதுதான். இந்திய விமானப் படையின் தாக்குதல் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடிக்கப் போவது எவ்வளவு நிதர்சனமோ அந்த அளவுக்கு இந்தக் குழந்தையும் விமானப் படையின் தாக்குதலுக்கு வாழ்நாள் சாட்சியாக விளங்கப் போவதும் நிதர்சனமான உண்மை.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக இருக்கணும்னா உங்க வீட்டு வாசல்ல முருங்கை மரத்தை நட்டு வைங்க!

tamiltips

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

tamiltips

5 முறை அடுத்தடுத்து தோல்வி! மனம் தளரா முயற்சி! 6வது முறையில் சாதித்த விழுப்புரம் சித்ரா!

tamiltips

மாமிசங்களில் மட்டும் அல்ல காய்கறிகளிலும் ஈகோலி பாக்டீரியாக்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

tamiltips

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

tamiltips

குஷி பட பாணியில் ஒரே ஹாஸ்பிடலில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கணவன் மனைவியாகும் அதிசயம்!

tamiltips