Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும். குறிப்பாக இதன் இலைகள் மற்றும் பூக்களில் பென்சோயிக் அமிலம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரோட்டின், பிசின், அஸ்கார்பிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், டனாட் அமிலம், ஓலியானோலிக் அமிலம் மற்றும் ஃபிளவனோல் கிளைகோசைடு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதன் மருத்துவ குணத்தால் நிறைய நன்மைகளை நமக்கு அள்ளி தருகிறது. அந்தவகையில் இதன் மருத்து குணங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

இரண்டு மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் மற்றும் நான்கைந்து சொட்டு பாரிஜாத எண்ணெய்யை கலந்து சூடு படுத்துங்கள். இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அலற்சி குணமாகும்.

1 மில்லி ஆலிவ் ஆயில் உடன் 2 சொட்டுகள் பாரிஜாத எண்ணெய்யை கலந்து பாதங்களில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் உடனே உடம்பு சூடு தணிந்து காய்ச்சல் குணமாகி விடும்.

5-6 பாரிஜாத இலைகளை நசுக்கி 2 மில்லி தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொள்ளுங்கள். இதை ஆர்த்ரிட்ஸ் உள்ள பகுதியில் அப்ளே செய்யுங்கள்.

Thirukkural

20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் அரைப்பங்காக வற்றும் வரை சூடுபடுத்தி அதை வடிகட்டி 3 பங்காக பிரித்து இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நன்மை உண்டாகும்.

10-15 பாரிஜாத இலைகளை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள். 5-7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி இந்த தண்ணீரை குடித்து வந்தால் இருமல் நின்று விடும்.

பாரிஜாத இலைகளை போட்டு டீ தயாரித்து அதை ஒரு நாளைக்கு ஒரு முறை என பருகி வாருங்கள். மலச்சிக்கல் இனி இருக்காது. 20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் நீரில் கலந்து சூடுபடுத்துங்கள். தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு 3 பகுதியாக பிரித்து கொள்ளுங்கள்.

இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நோயெதிப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

tamiltips

குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

tamiltips

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

tamiltips

வெள்ளைப்பூண்டுக்கும் கொழுப்புக்கும் ஏன் ஆகாது? இந்த செய்தியை படித்து தெரிந்துகொள்ளுங்கள் !!

tamiltips

பிறந்தது ஃபானி! கொட்டும் மழைக்கு இடையே ஜனித்த குழந்தைக்கு புயல் பெயர்!

tamiltips

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

tamiltips