Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தள்ளுவண்டி கடைக்காரர் ஆன இளம் என்ஜீனியர்! கரூர் பரிதாபம்!

கரூரை சேர்ந்தவர் ஜெய்சுந்தர். மாடர்ன் இளைஞரான அவர், என்ஜீனியரிங் படித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் செல் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். பின்னர், கோவை ப்ரீகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், வீட்டில் அம்மாவுக்கு உடல்நலம் இல்லாத காரணத்தால், சொந்த ஊருக்கு திரும்ப நேரிட்டது. அங்கிருந்தபடியே, புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்த ஜெய்சுந்தர், சில ஆண்டுகள் கழிந்தபின், பணிச்சுமை தாங்கமுடியாமல், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த வேலையையும் ராஜினாமா செய்துள்ளார். 

அதன்பின், கரூர் பஜாரில் அடிக்கடி தள்ளுவண்டி கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்டு வருவதை வாடிக்கையா வைத்திருந்த ஜெய்சுந்தர் ஒருநாள், பேசாமல், இதுமாதிரி தள்ளுவண்டி கடை ஒன்றை தொடங்கினால், என்ன என, யோசித்திருக்கிறார். வீட்டிலும், வெளியிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மனம் தளராமல், தள்ளுவண்டி கடையை தொடங்கிய ஜெய்சுந்தர், தனது நண்பர்களின் உதவியுடன், கரம் மசாலா தயாரிப்பது எப்படி, விற்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொண்டார்.

கடை நடத்த வாடகை தர முடியாமல் அவதிப்பட்ட நிலையில், அதற்கும் கோபிநாத் என்பவர் முன்வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது ஜூஸ் கடை முன்பே, கரம் மசாலா போட்டு விற்கும்படி, ஜெய்சுந்தருக்கு அவர் அனுமதி அளித்துள்ளார். இதன்பேரில், ஜெய்சுந்தர் கடை தொடங்கி, கடந்த 1 ஆண்டாக, கடும் உழைப்பை செலவிட்டு, தற்போது மாதம் ரூ.20,000 வரை வருமானம் ஈட்ட தொடங்கியுள்ளார். கருவூர் கரம் ஸ்டால் என்ற பெயரில் ஜெய்சுந்தர் நடத்தும் கடைக்கு, நாளுக்கு நாள் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து வருகிறது. உழைப்புக்கேற்ற வருமானம், மனசுக்கேற்ற வாழ்க்கை, இதுபோதும் என, மகிழ்ச்சி பொங்க, ஜெய்சுந்தர் தெரிவிக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கல் உப்பு நல்லதா தூள் உப்பு நல்லதா?? மருத்துவ உண்மை எது?

tamiltips

ஆந்திர ஸ்டைல்ல தக்காளி சட்னி வைக்கத்தெரியுமா? அவ்ளோ ருசியா இருக்கும் செய்து பாருங்க!

tamiltips

பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

tamiltips

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு சோயா பால் அவசியம்! ஏன் தெரியுமா?

tamiltips

சர்க்கரை வியாதி இருந்தால் என்ன தான் சாப்பிடுவது? பேரிச்சம் பழம் கூட சாப்பிடக்கூடாதா?

tamiltips

கர்ப்பத்தால் அதிகரித்த உடல் எடை எப்போது குறையத் தொடங்கும்னு தெரிஞ்சிக்க இந்த செய்தியை படிங்க !!

tamiltips