Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இங்க எல்லாம் கோடை மழை கொட்டப் போகுதாம்! எங்க எங்கனு தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பநிலையை பொறுத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை,திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது,திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

புளித்த தயிரை என்ன செய்ய வேண்டும் ??

tamiltips

குழந்தை பெற தயாராகும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டியவை!

tamiltips

அமேசானின் அட்டூழியம்! ஒரு தேங்காய் சிரட்டை விலை 1365 ரூபாயாம்!

tamiltips

நைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா ? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

tamiltips

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

tamiltips