Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இங்க எல்லாம் கோடை மழை கொட்டப் போகுதாம்! எங்க எங்கனு தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பநிலையை பொறுத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை,திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது,திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் சிறுநீர் தொந்தரவை சமாளிப்பது எப்படி?

tamiltips

இன்னும் 6 மணி நேரம் தான்! மணிக்கு 18கிமீ வேகம்! சென்னையை மிரட்டும் ஃபனி புயல்!

tamiltips

எகுரியது தங்கம் விலை! வாடிக்கையாளர்களுக்கு கசப்பான செய்தி.

tamiltips

மனைவியிடம் தாம்பத்திய உறவு குறுகிய நேரம் மட்டுமே செய்ய முடிகிறதா? கணவன்கள் தினமும் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips

வீட்டிலேயே இருந்து வெறுப்பா இருக்கா? சுவையான ஆரோக்கியமான கோதுமை வாழைப்பழ கேக் செய்து பாருங்க!

tamiltips

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

tamiltips