Tamil Tips
முக்கிய செய்திகள்

காதல் மனைவி குறித்து உருகிய சிவகார்த்திகேயன்! மனைவி வசதியான வீட்டு பெண்! அவளால் அழகான என்னுடைய வாழ்க்கை.. தருணங்கள்..!!

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய்மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக இத்தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள் மனைவி குறித்து சிவகார்த்திகேயேன் கூறுகிறார், ஒருமனமான இருமனம் என் தாய்மாமா மகள் தான் என்றாலும் ஆர்த்தியுடன் நான் அவ்வளவாக பேசியதில்லை.

நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து விட்டு, மாமா பெண்ணைத் தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார். ஆர்த்தி வசதியான வீட்டு பெண், ஆனால் திருமணமாகும் போது எனக்கு பெரிய வசதியில்லை. ஆனால் வசதியை அவர் எப்போதும் வெளிகாட்ட மாட்டார். நெகிழ்ந்த தருணம் என் மகள் ஆராதனா பிறந்தநாள் எங்களால் மறக்க முடியாது.

பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள். எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக் கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி. சமையல் திறமை சமையல் செய்வதில் திறமைசாலியான ஆர்த்தி திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுத்து அசத்தினார்.

Thirukkural

மேலும் மட்டன், சிக்கன் என ஆர்த்தி எதைச் சமைத்தாலும் அது பிரமாதமாக இருக்கும் சர்ப்பரைஸ் செய்வதை நிறுத்தினேன் திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டேன். எல்லாம் சினிமா பணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். இதையடுத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித்துறையில் ‘தக்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால் கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை. வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே வருமான வரிகளை அவர் சரிபார்ப்பது எளிதான விடயமல்ல! மனைவியே மந்திரி எங்கள் வீட்டு விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்து கொள்வது ஆர்த்தி தான்,

வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்தி தான் காரணம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது அவர் என்னிடம் கேட்டுக் கொள்வார். என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. என் நிலை அறிந்து அதற்கேற்றார் போல செயல்படுவார் ஆர்த்தி என கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வேலை இல்லாததால் வீட்டில் மாடு மேய்க்கும் பிரபல காமெடி நடிகர்! இணையத்தில் லீக்கான காட்சி

tamiltips

நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்ததைப் பார்த்து அவரின் மனைவி செய்த செயல்…!அதற்குப் பின் அதை வெளியிட்ட பிரபலம்…!

tamiltips

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இவரா ?? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க !!

tamiltips

நடிகர் முரளியின் தம்பியை பற்றி தெரியுமா ?? தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி ஜெயித்த வில்லன் நடிகர் !! யாருன்னு பாருங்க !!

tamiltips

திருமணமாகாமல் குழந்தைக்காக காத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்?.. ஷா க்கொடுத்த நடிகை ஜான்வியின் பதிவால் கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

tamiltips

அடடே! காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களா இது? இப்போ ஹீரோ மாதிரி மீசை, தாடியுடன் வளர்ந்து விட்டார்கள்.. புகைப்படம் இதோ..!!

tamiltips