Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தினமும் சாத்துக்குடி சாறு குடித்துவந்தால் உடலிலும் சருமத்திலும் என்ன மாற்றமெல்லாம் நடக்கும்?

அலர்ஜியால் வருவது தான் ஆஸ்துமா பிரச்சனை. அதாவது முச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கும் பிரச்சனை. ஒருவர் காலையில் தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். ஆய்வு ஒன்றில் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தொற்றுக்களால் சுவாச பாதை சுருங்குவது தடுக்கப்படுவதோடு, சுவாச பாதையில் உள்ள தசைகளை மென்மையாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஜூஸ் எதையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.

கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாமிசங்களில் மட்டும் அல்ல காய்கறிகளிலும் ஈகோலி பாக்டீரியாக்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? கூடாதா?

tamiltips

கணினி முன் பலமணி நேரம் வேலை செய்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிங்க!

tamiltips

நைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா ? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips

உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

tamiltips

வலுவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என்ன செய்யனும் தெரியுமா?

tamiltips